ஷா ஆலம், அக்.11-
இன மேம்பாட்டை மேற்கொள்வதற்கான மக்களின் நம்பிக்கையை பெறுவதில் அதிகாரத்தில் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ தகவலை ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு அதை எதிர்க்கும் மனநிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையானது மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதை உறுதிப்படுத்த எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் வெற்றி பெறச் செய்வது கடினமாகியுள்ளது என்றார் அவர்.
“இன்றைய சூழலானது தேசிய தீவிரவாதம் நோக்கி நடைபோடுவது போல் இருக்கிறது” என்றார்.