பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 20:
அண்மையில் நடந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தோல்வி தழுவியதை தொடர்ந்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தமது அமைச்சரவையை மாற்றம் செய்யலாம் என சூசகமாக என்று கோடி காட்டினார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவருமான மகாதீர் இந்த மாற்றம் இன்று அல்லது நாளை நடக்காது என உறுதிப் படுத்தினார்.
” அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். அமைச்சர்களின் ஆளுமைகள் மற்றும் செயல் திறன்களையும் மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு தான் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்படும்,” என்று பெர்சத்து கட்சியின் உச்ச மன்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு துன் மகாதீர் பேசினார்.