கோலாலம்பூர், நவ.21-
நாட்டின் மேம்பாடு நிலையாக இருக்க பொருளாதார வளர்ச்சியும் சமூக பாதுகாப்பும் சீராக இருப்பது அவசியம் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார். பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு திட்டமிடும் தலைவர்கள் போதிய சமூக பாதுகாப்பை தயார் செய்வது குறித்தும் சிந்திப்பதோடு மதிப்பீடு செய்வதும் அவசியம் என்றார் அவர்.
தங்கள் ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் சொன்னார்.
அபாரமான அடிப்படை வசதிகள் மற்றும் டிஜிட்டல் அடைவுநிலை நாட்டின் தோற்றத்தை உயர்த்தினாலும் அது நாட்டின் பசுமையை பாதிக்கும் அளவிற்கு இருக்கக் கூடாது என்று அவர் நினைவுறுத்தினார்.