கோலா லம்பூர், நவம்பர் 21:
எதிர் வரும் 2025-இல் ஆசியான் வட்டார ரீதியில் தலைசிறந்த விவேக மாநிலமாக உருவெடுக்கும் முயற்சியில் சரியான பாதையில் சிலாங்கூர் மாநிலம் உள்ளது என்றும் அந்நிய நிறுவனங்களுடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஸ்பேய்ன் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலக விவேக மாநில கண்காட்சி மாநாட்டில் கையெழுத்திட்டது இதை உறுதிப் படுத்துகிறது என்று மந்திரி பெசார் பெறுநிறுவனம் (எம்பிஐ) தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தனது துணை நிறுவனங்களான ஸ்மார்ட்செல் நிறுவனம், கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் மற்றும் சிலாங்கூர் விவேக விநியோக பிரிவு (எஸ்எஸ்டியூ) மூலம் செயல்படுத்தி உள்ளது.