கோலாலம்பூர், டிச.9-
கெஅடிலான் கட்சியில் குண்டர் கும்பல் கலாச்சாரம் பரவிருப்பதை அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் அமிருடின் ஷாரி கடுமையாகச் சாடினார். இக்கட்சி துணிச்சல் மிக்க போராளிகளை உருவாக்கியதே குண்டர் கும்பலை உருவாக்கியதில்லை என்றார் அவர்.
நம்மை யாரும் குண்டர் கும்பல் குறிப்பிடுவதைக் காண விரும்பவில்லை. கெஅடிலான் கட்சி மக்களைப் பாதுகாக்கும் தலைவர்களையே மட்டுமே உருவாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“கூட்டு வளப்பத்தை நோக்கி எனும் கொள்கையே நாம் கெஅடிலான் கட்சி பேண விரும்புகிறோம் என்பதற்கான ஓர் ஆதாரம்” என்று சிலாங்கூர் மந்திரி பெசாருமான அமிருடின் தெரிவித்தார்.