கோல லங்காட், மார்ச் 4-
கோல லங்காட்டின் தென் பகுதியில் உள்ள 50 ஹெக்டர் பரப்பளவிலான் பராமரிப்புக் காட்டு பகுதியில் ஏற்பட்ட தீயில் 50 விழுக்காடு அணைக்கப்பட்டுவிட்டதாக மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவு (போம்பா) தெரிவித்தது.
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் புகார் செய்யப்பட்ட இத்தீச்சம்பவம் அதற்கு சில நாட்களுக்கு முன்னரே ஏற்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிப்பதாக சிலாங்கூர் போம்பா தலைவர் நோரஸாம் காமிஸ் கூறினார்.
கடுமையான வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக இந்தத் தீ எளிதில் தொடர்ந்து பரவி வருவதாக அவர் சொன்னார்.
“இதனிடையே, சில விவசாயிகள் மேற்கொண்ட திறந்த வெளி எரிப்பு நடவடிக்கையினால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தொடக்கக் கட்ட விசாரணை காட்டுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்,
இப்பலுதியில் அத்துமீறி நுழைந்த சில விவசாயிகள் அங்கு இஞ்சி, சக்கரை வள்ளி கிழங்கு, வாழை மரங்கள் போன்றவற்றை பயிரிட்டுள்ளதை ஆகாய மார்க்கமாக எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.