கிள்ளான், மார்ச் 4:
சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்கள் 24 மணி நேரத்திற்குள் ஒரு சிறந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றும் மத்திய அரசாங்கம் எதிர்நோக்கி இருக்கும் அரசியல் சூழ்நிலையில் முதிர்ச்சியாக செயல் பட்டிருப்பதாக டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி மேலும் குறிப்பிடுகையில் இந்த முடிவின் வழி மாநில மக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்க முடிகிறது என்று அவர் விவரித்தார்.
கடந்த பிப்ரவரி 25-இல் மாநில பாக்காத்தான் தலைவருமான அமிருடின், அமானா கட்சியின் தலைவர் இஞ்சினியர் ஈஸாம் காசீம், ஜனநாயக செயல்கட்சியின் தலைவர் கோபிந்த் சிங் ஆகியோர் சிலாங்கூர் மாநில அரசரை சந்தித்தனர்.