ஷா ஆலம், மார்ச் 20:
அடுத்த இரு வாரங்களுக்கு நடமாட்ட கட்டுப்பாட்டை அரசாங்கம் அறிவித்ததை அடுத்து தங்கள் வட்டாரத்தில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் அங்காடி கடைகாரர்கள் சம்பந்தப்பட்ட உத்தரவைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் கோல சிலாங்கூர் மாவட்ட மன்ற அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கை மன்றத்தின் 1988ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ளதாக எம்டிகேஎஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள கால கட்டத்தில் அரசாங்க உத்தரவை மதித்து கடைகளை அடைத்துள்ள வணிகர்களுக்கு என்று என்று அது கூறியது.
ஆயினும். உத்தரவை பின்பற்றாத வணிகரிகள் குறித்து காவல் துறையிடல் தெரிவிக்கப்படு. இந்த குற்றதை முதல் முறையாக புரிபவர்களுக்கு அதிக பட்சம் ஈராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.