Hospital Sungai Buloh dilengkapi pelbagai kemudahan khusus bagi merawat penyakit berjangkit. Foto BERNAMA
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மருத்துவ பணியாளர்களுக்கு தலா ரிம. 200 உதவித் தொகை

ஷா ஆலம், மார்ச் 20-

சிலாங்கூர் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் 6,000 பணியாளர்களுக்கு தலா 200 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த உதவித் தொகை கூடிய விரைவில் வழங்கப்படும் என்றார் அவர்.

“தங்களின் பணிகளை சிறப்பாக ஆற்றிவரும் இந்தப் பணியாளர்களின் சேவையை மாநில அரசு மதிக்கிறது. இவர்களில் சிலர் விடுப்பு இன்றி பணிபுரிவதையும் நாம் உணர்ந்துள்ளோம்” என்றார் அவர்.

இதற்காக 2.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கோவிட்-19 பாதிப்புகள் மீதான சிலாங்கூர் பரிவுமிக்க உதவித் திட்ட அறிவிப்பு குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அமிருடின் தெரிவித்தார்.


Pengarang :