Dr Siti Mariah Mahmud ketika sidang media Mesyuarat Tindakan Denggi Peringkat Negeri Selangor di Bangunan SUK, Shah Alam pada 16 Oktober 2019. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

தனித்து வாழும் தாய்மார்களுக்கு கூடிய விரைவில் ‘கீஸ்’ அட்டை !!!

ஷா ஆலம், ஏப்ரல் 14:

தனித்து வாழும் தாய்மார்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர்  அன்புத்தாய் திட்டம் (கீஸ்) கூடிய விரைவில்  இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம் என சிலாங்கூர் மாநில சமூக நலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மாமுட் தெரிவித்தார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) நடவடிக்கையினால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டும் வர்கத்தினர் திக்குமுக்காடி வருகின்ற சூழ்நிலையில் கீஸ் அட்டை மீண்டும் விண்ணப்பம் செய்யலாம் என சிலாங்கூர் இன்றுக்கு அவர் விவரித்தார்.

” ஒரு வார காலகட்டத்தில் நாங்கள் கீஸ் அட்டை கொண்டிருப்பவர்களுக்கு உதவிகளை அறிவிப்போம். அது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள  விண்ணப்பங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்து வருகிறோம். எங்களுக்கு தொடர்ந்து விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. இதற்கு முன்புள்ள கீஸ் ஒதுக்கீட்டை பயன்படுத்தி தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவிகள் செய்ய முடியும். ஆகவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படாது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.


Pengarang :