Pasukan petugas perubatan menjalankan ujian saringan Covid-19 kepada penduduk di Hulu Langat pada 12 April 2020. Ujian itu dilakukan selepas pengumuman Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari untuk menjalankan saringan besar – besaran di zon merah di seluruh Selangor. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் இன்று ஒரே கோவிட்-19 நோய் புதிய சம்பவம்

ஷா ஆலம், ஏப்ரல் 21:

இன்று நண்பகல் 12 வரை சிலாங்கூர் மாநிலத்தில் 1 கோவிட்-19 புதிய சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) டிவிட்டரில் தெரிவித்தது.நேற்றைய தினத்தை விட இன்று சம்பவம் குறைந்துள்ளது அரசாங்கத்திற்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) வெற்றியை பிரதிபலிப்பதாக இருக்கிறது என்று எஸ்திஎப்சி கூறியிருக்கிறது.

” நேற்றோடு ஒப்பிடும் போது இன்று கோவிட்-19 நோய் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.தொடர்ந்து நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி நடக்க வேண்டும். அலட்சியமாக இருக்காதீர்கள்,” என்று எஸ்திஎப்சி டிவிட்டரில் பதிவு செய்துள்ளது. இன்று வரை சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்கள் மொத்தம் 1357.

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,532 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 50 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒரு மரணம் ஏற்பட்டு,  இதுவரையிலான மரண எண்ணிக்கை 93-ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும், இன்று 103 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,452 ஆக உயர்ந்திருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 


Pengarang :