NATIONAL

டிரோனைப் பயன்படுத்தாதீர்! -அனைத்து தரப்பினருக்கும் நினைவுறுத்து

கோலாலம்பூர், ஏப். 27-

மே 12 ஆம் தேதி வரை நீடிக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நாடு முழுவதும் எந்தவோர் இடத்திற்கும் டிரோனைப் பயன்படுத்த வேண்டாம் என்று செய்தியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 2016 மலேசிய பொது விமான (எம்சிஏஆர் 2016) விதிமுறைகளுக்கு ஏற்ப மலேசிய பொது விமான துறையின் (சிஏஏஎம்) அனுமதியின்றி டிரோனைப் பறக்கவிடுவது குற்றமாகும் என்று அரச மலேசிய போலீஸ் படையின் ஆகாய நடவடிக்கை குழு டிரோன் பிரிவு தலைவர் சூப்ரிண்டென் ராஷா அசால்டின் ஷாஃபி தெரிவித்தார்.

“அனுமதியின்றி டிரோனைப் பறக்கவிட்டால் தனி நபருக்கு குறைந்தது 50,000 வெள்ளி அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறையும் நிறுவனத்திற்கு எதிராக 100,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும்” என்றார்.
“எந்தவொரு தரப்பும் சிஏஏஎம் மற்றும் போலீசிடமிருந்து அனுமதி பெறாமல் டிரோனைப் பறக்கவிடக் கூடாது” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.


Pengarang :