NATIONAL

பிபிஎன் உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிதி மே 4 முதல் வழங்கப்படும்- நிதியமைச்சர்

புத்ராஜெயா, ஏப்ரல் 29:

பி40 மற்றும் எம்40 பிரிவுகளுக்கான தேசிய பரிவுமிக்க நிதி உதவி (பிபிஎன்) திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நிதி வழங்கும் நடவடிக்கை மே 4 முதல் வழங்கப்படும். ரிம 7.74 மில்லியன் பலன் அடையும் பிபிஎன் முதல் கட்டமாக 5.47 பில்லியனை ரிங்கிட்டைப் பெற்றுள்ளதாக நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

ஏப்ரல் 26 வரை, அமைச்சகம் 3.26 மில்லியனுக்கும் அதிகமான புதிய விண்ணப்பங்களையும் முறையீடுகளையும் பெற்றுள்ளது. இவற்றில், 2.96 மில்லியன் புதிய விண்ணப்பங்கள் மற்றும் 305,000 முறையீடுகள் ஆகும்.


Pengarang :