Foto Sumber: Facebook Ng Sze Han
PBTSELANGOR

இன்று முதல் எம்பிஎஸ் பகுதிகளில் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் சேவையை தொடரும் !!!

ஷா ஆலம், மே 6:

இன்று தொடங்கி ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் செலாயாங் நகராண்மை கழகத்தின் (எம்பிஎஸ்) கீழ் மீண்டும் பணியில் ஈடுபடவிருக்கிறது. காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரையில் போக்குவரத்து சேவையை வழங்கும் என எம்பிஎஸ்-இன் கார்ப்பரேட் பிரிவு இயக்குநர் முகமட் ஸீன் மாசாட்  கூறினார். 9 ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் 3 வழிப்பாதைகளில் சேவைகளில் ஈடுபட உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” எல்லாப் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, முகமூடி அணிவது மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவுவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.


Pengarang :