புத்ராஜெயா, மே 10:
நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) ஜூன் 9 வரை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின யாசின் அறிவித்துள்ளார். சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கெஎன்) ஆகியவற்றுடன் கலந்தாலோசனை செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் கோவிட்-19 நோய் பரவலை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இந்த முடிிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“ சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆலோசனையின் பேரில், பிகேபிபி மே 12 முதல் ஜூன் 9 வரை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்க விரும்புகிறேன், இது 4 வாரங்கள் தொடர உள்ளது. பொது மக்கள் அனைவரும் பிகேபிபி நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். தொடர்ந்து காவல்துறை மற்றும் முன் வரிசைப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, கோவிட்-19 நோய் தொடர் சங்கிலியை முற்றாக அறுக்க நாட்டு மக்கள் அரசாங்கம் நிர்ணயம் செய்த வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும், ” என்று அவர் இன்று ஆர்டிஎம் நேரடி ஒளிபரப்பு வழியாக ஒரு சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.