安邦再也市议会执法人员充公违例商家的货物。
PBTSELANGOR

எம்பிஏஜே: நடைபாதையை மறைத்த வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது

ஷா ஆலம், மே 12:

நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) காலப்பகுதியில் நடைபாதையில் தடைகளை உருவாக்குவதாகக் கண்டறியப்பட்ட 44 வணிக வளாகங்களுக்கு எதிராக அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு (பிகேபிபி) மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும்  மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் ஆணையை (பிகேபிபிடி) மீறுவதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமது முகநூல் வழியாக எம்பிஏஜே நேற்று அறிவித்தது.

” மொத்தத்தில் பொருட்களை பறிமுதல் செய்தது, வணிகர்களுக்கு அபராதம் மற்றும் வணிக உரிமங்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட 44 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று அதில் தெளிவுபடுத்தியது.


Pengarang :