PUTRAJAYA, 7 Mei — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah bercakap semasa sidang media harian berkenaan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 16 புதிய சம்பவங்கள்; முதல் முறையாக மிகக் குறைந்த சம்பவங்களை பதிவு செய்யப்பட்டுள்ளது

புத்ராஜெயா, மே 12:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,742 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 16 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிகேபி நடவடிக்கை தொடங்கியது முதல் இதுவே மிகக் குறைந்த சம்பவங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 9 நோயாளிகள் வெளிநாட்டினர் எனவும் 7 உள்நாட்டினர் ஆகும். இன்று எந்த ஒரு மரணமும் பதிவு செய்யப்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 109-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 16 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 3 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 110 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,223 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 71.55 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.

 


Pengarang :