edf
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: தொலைத் தொடர்பு சேவையை சரியாக பயன்படுத்துங்கள், உறவுகளை வலுப்படுத்துங்கள்

ஷா ஆலம், மே 17:

தொலைத் தொடர்பு சேவைகளை இன்று அதிகம் பயன்படுத்துமாறு மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களையும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி கேட்டுக்கொண்டார். இணையம் மற்றும் தொலைபேசி மூலம் நாம் தற்போதைய சூழலில் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக இது போன்ற ஒரு சவாலான நேரத்தில் அதன் பயன்பாடு மிகவும் இன்றியமையாதது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” தொலைதொடர்பு சேவைகளை சரியான முறையில் பயன்படுத்துங்கள்” என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தனது முகநூலில் உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவலறிந்த சமுதாய தினம் 2020-க்காக வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். தொலைத் தொடர்பு மக்கள் மற்றும் சுற்றியுள்ள சமூகத்துடன் நெருக்கமான உறவை வளர்க்கக்கூடும் என்றார். இது அறிவைப் பெறுவதற்கும், ஒரு வணிகத்தை நடத்துவதற்கும், செய்திகள் அல்லது அனுபவங்களை பரஸ்பர நன்மைக்காகப் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது” என்று அவர் எழுதினார்.


Pengarang :