ஷா ஆலம், மே 21:
செப்பாங், டெங்கில் மற்றும் உலு கிள்ளான் ஆகிய பகுதிகள் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்களும் அதிகரித்ததை தொடர்ந்து மஞ்சள் மண்டலங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) அதன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு மேற்கண்ட பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று நண்பகல் 12 மணி வரையும் செப்பாங் பகுதியில் மூன்று சம்பவங்களும் மற்றும் டெங்கில் மற்றும் உலு கிள்ளானில் முறையே ஒரு சம்பவமும் ஏற்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.