ஷா ஆலம், ஜூன் 2:
கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது எனவும் நேற்று 11 சம்பவங்களாக இருந்த நிலையில் இன்று ஆறு சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 1,926 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.
” கோவிட்-19 வைரஸ் தொடர்ந்து நம்மிடையே இருந்து வருகிறது. நாம் புதிய பழக்க வழக்கத்தை அமல்படுத்த வேண்டும். இதுவே நமக்கு நல்லது,” என்று எஸ்திஎப்சி கூறியிருக்கிறது. மலேசியாவில் மொத்தம் 7,877 கோவிட்-19 நோய் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.