Pasukan petugas kesihatan Selcare menjalankan saringan komuniti Covid-19 dari rumah ke rumah anjuran Kerajaan Selangor secara percuma di Rantau Panjang, Klang pada 19 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: காரில் இருந்த வண்ணம் கோவிட்-19 பரிசோதனை; சிலாங்கூர் மாநிலம் ஒரு முன்னோடி !!!

ஷா ஆலம், ஜூன் 10:

கோவிட்-19 தொற்று நோயாளிகளை அடையாளம் காண சிலாங்கூர் மாநிலம் எடுத்த காரில் இருந்தபடி பரிசோதனை நடவடிக்கை மலேசிய மருத்துவத்துறையில் முன்னோடி முயற்சி ஆகும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். மாநிலத்தின் முக்கிய  பெறுநிறுவனமான சிலாங்கூர் மாநில மேம்பாட்டு வாரியத்தின் (பிகேஎன்எஸ்) துணை நிறுவனம் செல்கேர் இந்த முயற்சிக்கு வித்திட்டது. மூத்த குடிமக்கள் மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்களை அடையாளம் காண இது பெரும் உதவியாக இருந்தது என்று அமிருடின் ஷாரி கூறினார்.

” சிலாங்கூரில் கோவிட்-19 தொற்று நோயை அடையாளம் காண இது மிகவும் இன்றியமையாதது இருந்தது. எல்லோருக்கும் எனது நன்றி,” என்று அமிருடின் ஷாரி தனது முகநூலில் பதிவு செய்தார்.

சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற அதிகாரிகள் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டு அதிவேகமாக பரவி வந்த தொற்று நோயை கட்டுப் பாட்டில் கொண்டு வர பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :