Dato’ Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari ketika ditemui SelangorKini selepas Program Ziarah Kasih di Kampung Melayu Batu Caves pada 27 Jun 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சட்டமன்றத்தில் பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் தாக்கல் செய்யப்படும் !!!

கோம்பாக், ஜூன் 27:

எதிர் வரும் ஜூலை 13-இல் இடம் பெறவிருக்கும் சிலாங்கூர் மாநில சட்டசபை கூட்டத்தில் மிதமான பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த ஊக்குவிப்பு திட்டத்தில்; கோவிட்-19 தாக்கத்தினால் துவண்டு போயுள்ள மாநில பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்யும் வகையில் ஆறு மாத காலகட்டத்திற்கு வரையறுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

” மாநில சட்டமன்றத்திற்கு இது தொடர்பாக தெரிவிப்பேன். பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்யும் வகையில் ஆறு மாத காலகட்டத்தில் இது திட்டமிடப்படும். இது மட்டுமின்றி, சிலாங்கூர் மாநில அரசாங்க நிர்வாகத்தில் அடைந்த வெற்றிகளை பறைசாற்றும் விதமாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறேன்,” என்று இன்று சுங்கை துவா சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிரூடின் ஷாரி பேசினார்.

 

 


Pengarang :