PBTSELANGOR

மாற்றுத் திறனாளிகள் நடைபாதையை மேம்படுத்த வெ. 12 லட்சம் ஒதுக்கீடு சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அறிவிப்பு

சுபாங் ஜெயா, செப் 24- மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நடைபாதையை மேம்படுத்த சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் 12 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

நகராண்மைக் கழகத்தின் தடையற்ற நகர் திட்டத்தின் கீழ் USJ10, SS15, SS16 மற்றும் பூச்சோங் பிரிமாவில் இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.

பொதுமக்களுடனான சந்திப்பின் போது பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் பேரில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

யுஎஸ்ஜே 10 பகுதி அதிகளவில் மக்கள் கூடும் பரபரப்புமிக்க இடமாக விளங்குவதால் முதல் திட்டம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :