PBTSELANGOR

பத்து கேவ்ஸ் பற்றிய வழிகாட்டி புத்தகம் வெளியீடு

ஷா ஆலம், செப் 28- பத்து கேவ்ஸ் பற்றிய வழிகாட்டிப் புத்தகம் ஒன்றை செலாயாங் நகராண்மைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம் சிலாங்கூர் பொது  நூலகத்திடம் ஒப்படைக்கப்படும்.

மொத்தம் 116 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் அந்த மலைப்பிரதேசத்தில் உள்ள பல்லுயிர்கள், தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் பற்றிய விளக்கங்கள் மற்றும் அறிவியல்பூர்வமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

இது அனைத்து நிலையிலான மக்களும் பயன் பெறக்கூடிய வழிகாட்டிப் புத்தகமாக விளங்கும் என்று செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் ஷாரில்  முகமது நோர்  கூறினார்.

மலேசிய குகைகள் பாதுகாப்புச் சங்க  உறுப்பினர்களான டாக்டர் ரூத் கியு, டாக்டர் ரோஸ் பாத்திமா மற்றும் டாக்டர் அத்திக்ஹா ஆகியோர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


Pengarang :