ஸ்ரீ சித்தியா 12 -சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தொகுதியான ஸ்ரீ சித்தியா இந்திய வாக்காளர்கள் 800 பேர் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் ஹல்மி அபூ பாக்காரிடமிருந்து
தீபாவளிக்கான அன்பளிப்பாக 100 வெள்ளிக்கான பரிசு கூடை பற்றுசீட்டுகளை
பெற்றுக்கொண்டனர்.
இது குறித்துக் கருத்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் 80 ஆயிரம் வெள்ளி இந்த
நிகழ்வுக்கு ஒதுக்கப் பட்டுள்ளதாகவும். இந்தத் தீபாவளி அன்பளிப்பு பி 40 பிரிவைச்
சேர்ந்த ஏழைக் குடும்பத்தினருக்கு வழங்குவதாகவும், இந்தக் கோவிட் 19 நோய்
தொற்றினால் மக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாகப் பலர் வருமானம் குறைந்தும், வேலையிழந்தும் அல்லல் படுபவர்களுக்கு ஒரு சிறு
உதவியாக இருக்கும் என்றார்.
இந்த உதவி திட்டத்தில் 600 பேருக்குப் பற்றுச்சீட்டுகளை சுகாதார இலாக்கா
நிர்ணயித்த விதிமுறைகளுக்கு ஏற்ப வழங்கியதாகவும், எஞ்சியவை அவரின்
சட்டமன்ற அலுவலகத்தின் வழி வழங்கப்பட்டதாகவும் கூறினார்.