தீபாவளிக்கான அன்பளிப்பாக 100 வெள்ளிக்கான பற்றுசீட்டுகளை தனது தொகுதியைச்சார்ந்த 400 ஏழைகளுக்கு மாநில அரசின் உதவியுடன் தான் ஏற்பாடு செய்ததாகச் சிலாங்கூர் பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரோசான சைனால் அபிடின் கூறினர்.
சிலாங்கூர் மாநில அரசு எப்பொழுதும் ஏழைகளின் நல்வாழ்வில் அக்கறைகொண்டு செயல்படும் ஒரு அரசாங்கம். இந்தப் பற்றுச்சீட்டு ஒரு குடும்பத்தின் எல்லாத் தேவைகளுக்கும் தீர்வாகாது, ஆனால், இம்மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் பல்வேறு உதவித் திட்டங்களில் இதுவும் ஒன்று, ஏழ்மையின் கடுமையான தாக்கத்திலிருந்து மக்களுக்கு சிறு நிவாரணம் அளிக்க வல்லதாக இதனை, தான் கருதுவதாகக் குறிப்பிட்டார் பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரோசான சைனால்