ECONOMY

ஷா ஆலமில் உள்ள உள்ளரங்கில் கோவிட்-19 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா? போலீசார் மறுப்பு

ஷா ஆலம், டிச 26- சுங்கை பூலோ மருத்துவமனையில் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக கோவிட்-19 நோயாளிகள் சிலர் ஷா ஆலமில் உள்ள உள்ளரங்கு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.

காணொளி வாயிலாக பரப்பப்பட்டு வரும் அந்த தகவலில் உண்மை இல்லை என்று சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமது கூறினார்.

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்பதோடு பொறுப்பற்ற தரப்பினர் பரப்பி வரும் பொய்யான தகவல்களை எளிதில் நம்பிவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

பொறுப்பற்ற தரப்பினரிடமிருந்து கிடைக்கும் தகவல்களை பரப்பவோ பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களை அவர் அறிக்கை ஒன்றின் வழி கேட்டுக் கொண்டார்.

இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் பொது அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் என்றார் அவர்.

 

 

 

 


Pengarang :