ஷா ஆலம், ஜன 19– அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக உறுப்பினர்களாக நான்கு இந்தியர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
பி.கே.ஆர். கட்சியின் சார்பில் ஜெ.விக்னேஸ்வரன் மற்றும் ஏ. ரகுநாதன் ஆகியோரும் ஜசெக சார்பில் ஆர்.ரெங்கநாதனும் அமானா கட்சி சார்பில் கே.தனபாலும் நகராண்மைக்கழக உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
அண்மையில் நகராண்மைக்கழகத் தலைவர் டத்தோ முகமது யாக்கோப் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் இவர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.