ஷா ஆலம், பிப் 3- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிணைந்து செயல்பட சிலாங்கூர் அரசும் மத்திய அரசும் இணக்கம் கண்டுள்ளன. நேற்று தேசிய பேரிடர் தயார் நிலை மற்றும் அதிரடி நடவடிக்கை மையத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆடாம் பாபா ஆகியோருக்கிடையே நடைபெற்ற சந்திப்பில் இந்த இணக்கம் காணப்பட்டது. இந்த சந்திப்பில் கோவிட்-19 நோய்த் தொற்று, தற்காலிக இடமாற்ற மையம், தரவு பரிமாற்றம், மாநில அரசு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக அமிருடின் ஷாரி கூறினார். நம்முடன் இணைந்து செயல்படுவதற்கு அமைச்சரும் அவரது குழுவினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். தரவுகளை மறைக்காமல் முழுமனதுடன் ஒன்றுபட்டு செயல்படுவதற்கான இதன் மூலம் கிடைத்துள்ளது என்றார் அவர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/05/PSX_20200512_094950-2-960x529.jpg)