PENDIDIKANSELANGORYB ACTIVITIES

மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரப்படும்- ரவாங் சட்டமன்ற உறுப்பினர் உறுதி

ஷா ஆலம், மார்ச் 6- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் நிலையை கருத்தில் கொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரப்படும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

இத்திட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த போது தொடக்கக்பட்டதாக அவர் சொன்னார்.

மாணவர்களின் நலன் கருதி இத்திட்டத்தை தொடர்ந்து அமல் படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களையும் உயர் கல்விக்கூட மாணவர்களையும் இத்திட்டத்தில் நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம். ஏனென்றால் அவர்கள்தான் கணினியை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றார் அவர்.

இதுவரை வேறுபாடின்றி பத்து மாணவர்களுக்கு கணினி வழங்கியுள்ளோம். மேலும் நால்வர் அண்மையில் அந்த உதவியை பெற்றுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உண்மையில் உதவி தேவைப்படும் மாணவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ரவாங் சட்டமன்ற தொகுதி சேவை மையம் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.

Pengarang :