ஜோகூர் பாரு, மே 14 – சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த பத்துப் பாஹாட் பாரிட் ராஜாவில் ஏற்பட்ட கலவரச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ உள்ளூர் நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
21 வயதான நபர் பாரிட் ராஜா காவல் நிலையத்தில் இரவு 8.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகச் சம்பவம் குறித்துத் தனது வாக்கு மூலத்தைப் பதிவு செய்ய, கொண்டு வரப் பட்டதாகப் பத்துப் பாஹாட் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏ.சி.பி இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.
காலை 11.04 மணியளவில் ‘அரசாங்கம் தோல்வி’ என்ற பொருள் கொண்ட ‘கெராஜான் காகல்’ என்ற சொற்களைக் கொண்ட ஒரு பதாகை ‘’பேனர்’’ பாரிட் ராஜாவில் உள்ள பாதசாரி பாலத்தில் ஆயர் ஹித்தாம் நோக்கிச் செல்லும் வழியில் கட்டப்பட்டுள்ளதாகப் போலீசாருக்குத் தகவல் வந்ததாக அவர் கூறினார், ஆனால் அந்த இடத்திற்குச் சென்றபோது அது அகற்றப் பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
“அதன்பின், பெறப்பட்ட ஒரு காணொளியில் ஒரு பேரணி மற்றும் ஒரு பதாகையை எழுப்புவது குறித்துப் போலீசாருக்கு ஒரு அறிக்கை கிடைத்தது.
“ஆரம்ப விசாரணையில் பாரிட் ராஜாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டது, பேரணியின் போது எழுப்பப் பட்ட பேனரும், அதற்கு முன் மேம் பாலத்தில் காணப்பட்டதாகத் தகவல் கிடைத்த அதே பேனர் தான் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 144/269 மற்றும் வெடிபொருள் சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.