ஷா ஆலம், ஜூன் 2– கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 126ஆக பதிவாகியுள்ளது. கடந்தாண்டு தொடக்கத்தில் இந்நோய்த் தொற்று பரவியது முதல் நிகழ்ந்த அதிக எண்ணிக்கையிலான மரணச் சம்பவம் இதுவாகும்.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,993ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் உயர்வு கண்டுள்ளது. இன்று மொத்தம் 7,703 பேர் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.