ஷா ஆலம், ஆக 8- இவ்வாண்டு ஜனவரி முதல் நேற்று வரை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நாட்டில் 9,918 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை 471 ஆக இருந்தது.
இவ்வாண்டில் பதிவான மரணச் சம்பவங்களில் 8,081 மருத்துவமனைகளிலும் 819 சம்பவங்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலும் நேர்ந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
உள்நாட்டினரைப் பொறுத்த வரை மருத்துவமனைகளில் 8,081 பேரும் மருத்துவமனைக்கு வரும் வழியில் 819 பேரும் மரணமுற்றதாக அவர் லும் சொன்னார்.
இந்நோய்த் தொற்றினால் இறந்த அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை 484 ஆகும் எனக் கூறிய அவர், இம்மாதம் 7 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 34 பேர் மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்தனர் என்றார்.