ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புயல் காற்றில் கிள்ளான் சி.ஏ.சி. மையத்தின் தற்காலிக கூடாரங்கள் சேதம்

கிள்ளான், ஆக 8- கோலக் கிள்ளானில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் செயல்பட்டு வரும் கோவிட்-19 மதிப்பிட்டு மையத்தில் (சி.ஏ.சி.) பொருத்தப்பட்டிருந்த ஏழு தற்காலிக கூடாரங்கள் நேற்று வீசிய கடும் புயல் காற்றில் சேதமுற்றன.

இச்சம்பவத்தின் போது அக்கூடாரங்களில் இருந்த இரு நோயாளிகள் காயங்களுக்குள்ளானதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம்சுல் அம்மார் ரம்லி கூறினார்.

லேசான காயங்களுக்குள்ளான அவ்விரு நோயாளிகளும் அந்த சி.ஏ.சி. மையத்தி சிகிச்சைப் பெற்றப் பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக அவர்  தெரிவித்தார்.


Pengarang :