ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மலேசியாவின் 9 வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20-அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மலேசியாவின் 9 வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று இஸ்தானா நெகாராவின் அறிக்கையின்படி, மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

முன்னாள் துணைப் பிரதமராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி, 61, டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் கடந்த ஆகஸ்ட் 16 அன்று  டேவான் ராக்யாட் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறியதால் பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த புதியமனம் அவசியப்பட்டது. 

Pengarang :