ஷா ஆலம், செப் 28- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று சற்று உயர்ந்து 1,231 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 979 ஆக மட்டுமே இருந்தது. நாட்டில் இன்று 11,332 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். நேற்று இந்த எண்ணிக்கை 10,959 ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரவா மாநிலத்தில் மிக அதிகமாக 2,358 சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் 1,319 சம்பவங்களுடன் ஜோகூரும் 1,088 சம்பவங்களுடன் கிளந்தானும் உள்ளன. இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- சபா – 965 பினாங்கு– 895 கெடா – 819 பேராக் – 678 பகாங் – 677 திரங்கானு – 629 மலாக்கா– 303 கோலாலம்பூர் – 240 நெகிரி செம்பிலான் – 89 புத்ரா ஜெயா – 19 பெர்லிஸ் – 19 லபுவான் – 3
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/09/klia-covid.jpg)