ADN Batu Tiga Rodziah Ismail (kanan) menyantuni penerima vaksin Covid-19 dalam program Vaksin Selangor (Selvax) bergerak DUN Batu Tiga di Dewan Majlis Bandaraya Shah Alam (MBSA) pada 13 September 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 2.1 கோடி பேர்   தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், அக் 11- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை 90 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 10 லட்சத்து 73 ஆயிரத்து 482 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 85 ஆயிரத்து 520 பேர் அல்லது 94.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

நேற்று நாடு முழுவதும் 129,518 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 31,932  பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 97,586  பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 7,4 விழுக்காட்டினர் அல்லது 231,858 பேர் இரண்டு  டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 72,2 விழுக்காட்டினர் அல்லது 22 லட்சத்து 71 ஆயிரத்து 858 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான மரணச் சம்பங்கள் பதிவு செய்யப்படவில்லை.


Pengarang :