MEDIA STATEMENTPBT

ஷா ஆலமில் நாளை வேலை வாய்ப்புச் சந்தை- 3,000 பேருக்கு வேலை வாய்ப்புகள்

ஷா ஆலம், அக்டோபர் 22;- இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நாளை 2021 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புச் சந்தை நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சுமார் 3,000 பேருக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில்  வான் போக்குவரத்து உள்பட பிரசித்தி பெற்ற 40 நிறுவனங்கள் பங்கேற்பதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்கும் நிறுவனங்களில் பார்க்சன் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட், புரோட்டோன் ஏடார், ஆயாமாஸ் ஃபூட் கோ சென். பெர்ஹாட், ஷின்-எட்சு போலிமர், தி மான்ஹாட்டன் பிஷ் மார்க்கெட் ரெஸ்டோரண்ட், பி.எச்.என். இண்டஸ்ட்ரி, ஓல்ட் டவுன் காஃபே ஜி.இ. ஏரோஸ்பேஸ் ஆகியவையும் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

வேலை தேடுவோர் நேரடியாகவும் இயங்கலை வாயிலாகவும் பேட்டி காணப்படுவர். எனினும் வாக் இன் முறையில் நடைபெறும் நேர்முகப் பேட்டிக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.

உடல் உஷ்ணத்தை அளவிடுவது, மைசெஜாத்ரா செயலியை ஸ்கேன் செய்வது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற  எஸ்.ஒ.பி, விதிகளை அவர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2021 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொள்வதற்கு இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :