ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

95.9  விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 26- நாட்டில் நேற்று வரை 95.9 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரத்து 346 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்.

மேலும் 98 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 44 ஆயிரத்து 240 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே 12 முதல் 17 வயது வரையிலான 87.7 விழுக்காட்டு இளையோர் அல்லது 27 லட்சத்து 62 ஆயிரத்து 739 பேர்  குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை  பெற்றுள்ளனர். 26 லட்சத்து 7 ஆயிரத்து 392 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 138,752 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 8,428 பேர் இரண்டாது தடுப்பூசியையும் 5,067 பேர் முதல் தடுப்பூசியையும் பெற்ற வேளையில்  125,257 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட  தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 23 லட்சத்து 91 ஆயிரத்து 444 ஆக உயர்வு கண்டுள்ளது.


Pengarang :