ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீபாவளி கிறிஸ்துமஸ் ” சிறப்பு விருந்து நிகழ்சிக்கு மாநில மந்திரி புசார் வருகை.

பெட்டாலிங் ஜெயா டிச 5 ;]- சிலாங்கூர் மாநில மக்கள் நீதி கட்சியின் சார்பில் , பெட்டாலிங் ஜெயா சிவிக் மண்டபத்தில் கோலகலமாக தொடங்கியது ” தீபாவளி கிறிஸ்துமஸ் ” சிறப்பு விருந்து நிகழ்ச்சியுடன் கூடிய கலை நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

இரவு 8.15 மணிக்கு மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வருகைத்தந்தார். மாநில மந்திரி புசாரை  சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆர்.சிவராசா, ஶ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் , மக்கள் நீதிக் கட்சியின் தேசிய உதவித் தலைவர் தியான் சுவா ஆகியோர் அழைத்து வந்தனர்.

தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.  பின்னர் தேசிய கீதம் பாடப் பட்டது.  மக்கள் நீதிக் கட்சியின் கொள்கைப் பாடல் பின் தொடர்ந்தது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் வரவேற்புரை ஆற்றினார். வருகையாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வந்து சிறப்பித்தற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த சிறப்பு நிகழ்வை வெற்றியடைய பாடு பட்ட மாண்புமிகு ஆர்.சிவராசா, ஊராட்சி, நகராட்சி மன்ற உறுப்பினர்கள்  மற்றும் ஏற்பாட்டு குழுவினருக்கு தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்  கொண்டார்.

கோலசிலாங்கூர் தென்னமரத் தோட்ட தொழிலாளர்களின் 40 ஆண்டு கால விவசாய நில போராட்டத்தினை கடந்த வாரத்தில் மாநில மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி வெற்றிகரமாக தீர்த்து வைத்ததை மாண்புமிகு குணராஜ் வெகுவாக பாராட்டினார்.


Pengarang :