HEALTHMEDIA STATEMENTNATIONAL

27 லட்சம் இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 8- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 86.6 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 26 ஆயிரத்து 684 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 90 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 33 ஆயிரத்து 870 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நாட்டிலுள்ள பெரியவர்களில் 97.1 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 34 ஆயிரத்து 488 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 98.5 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரத்து 008 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாட்டில் 124,499 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 4,538 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 6,538 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 113,423 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டதின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :