ECONOMYSELANGORSUKANKINI

2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சிகரமான செய்திகளை கொண்டு வரும்- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சுல்தான் நம்பிக்கை

ஷா ஆலம், ஜன 1– மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல் ஹாஜ் மற்றும் துங்கு பெர்மைசூரி  நோராஷிகின் தம்பதியர் அனைத்து மக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இன்று பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டு பல மகிழ்ச்சிகரமான செய்திகளை கொண்டு வரும் என்பதோடு இறைவனின் பாதுகாப்பு என்றென்றும் இருக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக சுல்தான் தம்பதியர் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறினர்.

இந்த புத்தாண்டு நாட்டு மக்கள் அனைவரும் பல மகிழ்ச்சிகமான செய்திகளைக் கொண்டு வரவும் சுபிட்சமும் வளப்பமும் தொடருவும் இறைவனின் பாதுகாப்பு கிடைக்கவும் பிரார்த்திக்கிறோம் என்று சிலாங்கூர் அரச பேஸ்புக் மூலம் வெளியிட்டப்பட்ட அறிக்கையில்  சுல்தான் தம்பதியர் குறிப்பிட்டனர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி சிலாங்கூரை உலுக்கிய கடும் வெள்ளப் பேரிடர் காரணமாக 2022 புத்தாண்டு வரவேற்பு நிகழ்வுகளை மாநில அரசு இம்முறை நடத்தவில்லை.


Pengarang :