ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

செவ்வாய்க் கிழமை வரை பல மாநிலங்களில் அடை மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன 2- நாட்டிலுள்ள பல மாநிலங்களில் எச்சரிக்கை அளவை எட்டும் அளவுக்கு மிகவும் மோசமான அளவில் அடை மழை வரும் 4 ஆம் தேதி வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜொகூர், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா சபா, கிளந்தான், திரங்கானு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா ஆகிய பகுதிகளில் இந்நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

ஜொகூரின் தங்காக், மூவார், பத்து பகாட் மற்றும் ஜோகூர் பாருவில் கனத்த மழை தொடர்ச்சியாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அத்துறை கூறியது.

பகாங் மாநிலத்தின் ஜெராண்டூட், மாரான், பெக்கான், குவாந்தான், பெரா, ரொம்பின் மற்றும் மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களிலும் மோசமான அடை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை மஞ்சோங், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பாகான் டத்தோ பாத்தாங் பாடாங், மூவாலிம் மற்றும் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயாவிலும் நிலவும் என அத்துறை தெரிவித்தது.

 


Pengarang :