கோலாலம்பூர், ஜன 3 – நாட்டில் தினசரி கோவிட்-19 நோய்த்தொற்றுஎண்ணிக்கை மீண்டும் 3,000 க்கும் கீழ் குறைந்தது. நேற்று நாடு முழுவதும் 2,882 பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,386 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 64 ஆயிரத்து 354 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய சம்பவங்களில் 49 மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தையும் மற்றவை ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தையும் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மொத்தம் 284 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 156 பேருக்கு செயற்கை சுவாச் கருவியின் உதவி தேவைப்படுகிறது என்று அவர் கோவிட்-19 நிலவரம் குறித்த தனது தினசரி அறிக்கையில் தெரிவித்தார். நேற்று மொத்தம் 3,291 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனுடன் சேர்த்து நோயிலிருந்து மீண்டவர்களின்மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 92 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.