ANTARABANGSASUKANKINI

ஆசிய பூப்பந்துப் போட்டி- தேசிய ஆண்கள் அணி 5-0 புள்ளிகளில் சிங்கப்பூரை வென்றது

ஷா ஆலம், பிப் 17 – இங்கு நேற்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய பூப்பந்துப் போட்டியின்  ஆடவருக்கான   பி பிரிவின் முதல் ஆட்டத்தில் மலேசியா சிங்கப்பூரை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது.

இரண்டாவது தேசிய இரட்டையர் பிரிவில் நூர் இசுடின் ரும்சானி-கோ ஸீ ஃபீ ஜோடி 21-10 மற்றும் 21-13 என்ற புள்ளிக் கணக்கில்  டெர்ரி ஹீ-ஆண்டி குவேக் ஜோடியை வீழ்த்தி நான்காவது புள்ளியைப் பெற்றது.

தேசிய மூன்றாவது ஒற்றையர் ஆட்டக்காரரான லியோங் ஜுன் ஹாவ் 21-17 மற்றும் 22-20 என்ற புள்ளி வேறுபாட்டில்  ஜோயல் கோ ஜியா வெய்யை வீழ்த்தி தேசிய அணியின் வெற்றியைத் தேடித் தந்தார்.

இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் குழு நிலையிலான இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா கஜகஸ்தானை எதிர்கொள்கிறது.

இவ்வாட்டத்தில்வெற்றி பெற்றால் நாட்டின் ஆடவர் அணி இயல்பாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். இதன் மூலம் அடுத்த மே மாதம் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 2022 தாமஸ்  கிண்ணப்  இறுதிச் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பினை  உறுதி செய்யும்.

எதிர்பார்த்தது போலவே, தேசிய குழுவுக்கு முதல் நிலை ஆட்டக்காரராக இருந்த லீ ஜி ஜியா 30 நிமிட ஆட்டத்தில் உலக சாம்பியனான லோ கீன் யூவை 21-6, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.

தேசிய குழுவின் சிறந்த ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்திய ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜோடி,  டேனி பாவா கிறிஸ்னாண்டா-எங் கீட் வெஸ்லி கோ இரட்டையரை 21-14, 21-12 என்ற புள்ளி வேறுபாட்டில்  வெற்றி கொண்டனர்.


Pengarang :