ECONOMYHEALTHNATIONAL

1.5  கோடிக்கும் அதிகமான  பெரியவர்கள்  ஊக்கத் தடுப்பூசியைப்  பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மார்ச்  7:  நேற்றைய  நிலவரப்படி  நாட்டில்  மொத்தம்  15,017,166  பெரியவர்கள்  அல்லது  63.8  விழுக்காட்டினர் கோவிட்-19  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ்  இணையதளத்தில்  உள்ள  தரவுகளின்  அடிப்படையில்,  மொத்தம்  2  கோடியே  29  லட்சத்து  27  ஆயிரத்து 624  பேர் அல்லது  97.4  விழுக்காட்டினர்  தடுப்பூசியை  முழுமையாகப் பெற்றுள்ளனர்,  அதே நேரத்தில்  2  கோடியே 32  லட்சத்து 4  ஆயிரத்து 433  பேர் அல்லது  98.6  விழுக்காட்டினர் குறைந்தது  ஒரு  டோஸ்  தடுப்பூசியைப்  பெற்றுள்ளனர்.

5  முதல்  11  வயது  வரையிலான பிள்ளைகளில்  மொத்தம்  10  லட்சத்து 26  ஆயிரத்து 732  பேர்  அல்லது  28.9  விழுக்காட்டினர்  சிறார்களுக்கான தேசியக்  கோவிட்-19  நோய்த்தடுப்புத்  திட்டத்தின்  மூலம்  தடுப்பூசியின்  முதல்  டோஸ்  பெற்றுள்ளனர்.

இதற்கிடையில்,  12  முதல்  17  வயதுடைய  இளையோரில்,  மொத்தம்  28  லட்சத்து 31  ஆயிரத்து 197  பேர்  அல்லது  91  விழுக்காட்டினர்  தடுப்பூசியை  முழுமையாகப் பெற்றுள்ளனர்,  அதே நேரத்தில்  29  லட்சத்து  31  ஆயிரத்து  709  பேர்  அல்லது  94.2  விழுக்காட்டினர் குறைந்தது  ஒரு  டோஸ்  தடுப்பூசியைப்  பெற்றுள்ளனர்.

தினசரித்  தடுப்பூசிகள்  நேற்று  24,342  முதல்  டோஸ்கள்,  882  இரண்டாம்  டோஸ்கள்  மற்றும்  31,882  பூஸ்டர்  டோஸ்கள்  என  மொத்தம்  57,106  டோஸ்  தடுப்பூசிகள்  வழங்கப்பட்டன,  இது  தேசியக்  கோவிட்-19  நோய்த்தடுப்பு  திட்டத்தின்  கீழ்  வழங்கப்பட்ட  ஒட்டுமொத்தத்  தடுப்பூசி  எண்ணிக்கை 6 கோடியே  77 லட்சத்து  31 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில்,  சுகாதார  அமைச்சகத்தின்  கிட்ஹப்  போர்ட்டலின்  படி,  கோவிட்-19  காரணமாக  நேற்று  55  இறப்புகள்  பதிவாகியுள்ளன.


Pengarang :