ECONOMYNATIONAL

கெஅடிலான் கட்சியின் தலைவராக அன்வார் போட்டியின்றி தேர்வு

கோலாலம்பூர், ஏப் 12– ஏற்கனவே கணிக்கப்பட்டதைப் போல் பி.கே.ஆர். கட்சியின் 2022/2025 ஆம் ஆண்டிற்கான தலைவராக டத்தோஸ்ரீ   அன்வார் இப்ராஹிம் போட்டின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்வாரின் இந்த வெற்றியை உறுதிப்படுத்திய கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இந்த நியமனம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அவருக்கு வழங்கிய மிகப்பெரிய கௌரவமாகும் என்றார்.

கட்சித் தேர்தலில் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் வழி 2018 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய வரலாற்றை அன்வார் மீண்டும் நிகழ்த்தியுள்ளார். நான் முழு மனதுடன் டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது இரவு மணி 11.59 வரை அதாவது வேட்பு மனுத்தாக்கல் நேரம் முடியும் வரை அன்வார் மட்டுமே தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார்.


Pengarang :