ஷா ஆலம், ஏப்ரல் 24 – அதிக பலத்தைப் பயன்படுத்தி ஒருவரைக் கைது செய்யும் வைரல் வீடியோவில் சிக்கிய இரு நபர்கள் சிலாங்கூர் கன்டிஜென்ட் தலைமையக குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதை சிலாங்கூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நபரைக் கைது செய்யும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று சிலாங்கூர் சிஐடி தலைவர் எஸ்ஏசி பஹாருதின் தைப் ஒரு சுருக்கமான அறிக்கை வெளியிட்டார்.
பொதுமக்கள் அல்லது சம்பவத்தைப் பார்த்த எந்தவொரு சுயாதீன சாட்சியும் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரணைகளுக்கு உதவ முன்வருமாறு அவர் வலியுறுத்தினார்.
ட்விட்டரில் வைரலாகப் பரவிய 1 நிமிட 25 வினாடிகள் கொண்ட வீடியோவைப் பற்றி பஹாருதீன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் இந்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.