ECONOMYHEALTHNATIONAL

760,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஏப்ரல் 27: சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயதுள்ள சிறார்களில் மொத்தம் 761,309 பேர் அல்லது 21.4 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 15 லட்சத்து 4 ஆயிரத்து 66 சிறார்கள் அல்லது 42.3 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயது வரையிலான இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 89 ஆயிரத்து 620 பேர் அல்லது 92.9 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 88 ஆயிரத்து 492 பேர் அல்லது 96.1 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரத்து 386 பேர் அல்லது 68.1 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸைப் பெற்றனர், அதே நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரத்து 472 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முடித்தனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 42 ஆயிரத்து 30 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

6,906 முதல் டோஸ்கள், 22,782 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 4,688 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 34,376 தினசரி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தடுப்பூசி எண்ணிக்கை 7 கோடியே 1 லட்சத்து 58 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக நேற்று 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.


Pengarang :