NATIONALSELANGORSUKANKINI

பிரீமியர்  லீக் கால்பந்து போட்டி- சிலாங்கூர் 2- கிளந்தான் சம நிலை கண்டன

ஷா ஆலம், மே 10- இங்குள்ள யு.ஐ.டி.எம். அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் சிலாங்கூர் எப்.சி.2 குழு கிளந்தான் யுனைடெட் எப்.சி. குழுவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

சொந்த இடத்தில் விளையாடிய போதிலும் கிளந்தான் குழுவை வெற்றிக் கொள்ள முடியாமல் போனது சிலாங்கூர் 2 அணிக்கு துரதிர்ஷ்டமான முடிவாக அமைந்தது.

ஆட்டத்தின் முதல் பகுதியை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிலாங்கூர் அணி எட்டாவது நிமிடத்தில் அப்துல் ரஹ்மான் டாவுட் மூலம் முதலாவது கோலை புகுத்தி குழுவை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தது.

தோல்வியினால் வெகுண்டெழுந்த கிளந்தான் குழு சமநிலை காணும் நோக்கில் சிலாங்கூர் 2 கோல் முனையை நோக்கி பல அதிரடித் தாக்குதல்களை நடத்தியது.

ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் நடுவரின் முடிக்கு ஆட்சேபம் தெரிவித்த காரணத்தால் சிலாங்கூர் ஆட்டக்காரர் முகமது ஹைக்கால் ஹக்கிமி ஹைரி சிவப்பு கார்டு வழங்கப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டார். இதனால் திடலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஆட்டத்தின் 78 வது நிமிடத்தில் கிளந்தான் ஆட்டக்காரர் முகமது அலிப் நஜ்மி ஷஹானி சிலாங்கூர் 2 தற்காப்பு அரணை ஊடுருவி பந்தை தலையால் முட்டி வலைக்குள் புகுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கோல் புகுத்துவதற்கு இரு குழுக்களும் மேற்கொண்ட அனைத்து பிரயத்தனங்களும் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுக்கு வந்தது.


Pengarang :